ஆன்லைன்மயமாகிறது கோவை அரசு மருத்துமனை- ஒரே 'கிளிக்கில்' உடல் நலம் தெரியும்
கோவை: கோவை மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளின் தகவலை டாக்டர்கள் கம்ப்யூட்டர் மூலம் அறிந்துகொள்ளும் வசதி விரைவில் வர உள்ளது.
மருத்துவமனைக்கு முதன்முறையாக சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் தங்களது உருவப்படம், மற்றும் விவரங்களை அளித்தால் அது கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்படும். நோயாளியின் எக்ஸ்ரே, ஸ்கேன் அறிக்கைகளையும் இதில் பதிவேற்றம் செய்துகொள்வார்கள். இதன்பிறகு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அடையாள அட்டையின் எண்ணை கம்ப்யூட்டரில் போட்டு பார்த்தாலே, நோயாளியின் உடல் நல வரலாறு அனைத்தும் தெரிந்துவிடும்.
டாக்டர் அறையில் சென்று நோயாளி அமர்ந்ததும், அவர் தனது கம்ப்யூட்டர் மவுசை ஒருமுறை கிளிக் செய்தாலே, நோயாளி குறித்த அனைத்து விவரத்தையும் பார்த்து புரிந்துகொள்ள முடியும். இதற்காக மருத்துவமனைக்கு 180 கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட உள்ளன. நோயாளிகள் குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்ய டேட்டா என்ட்ரி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications