பீகார் குண்டுவெடிப்பு: தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டன போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

Pon Radhakrishnan
சென்னை: பீகாரில், நரேந்திரமோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பை கண்டித்து தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்ட பின்னர், நாடு முழுவதும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், மக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். மக்கள் சக்தி அவர் பக்கம் சாய்வதையும், லோக்சபா தேர்தலுக்குப் பின் அவர் பிரதமர் ஆவது உறுதி என்பதும் நிச்சயமாகிவிட்ட நிலையில், நரேந்திரமோடியை கொலை செய்ய பல தீய சக்திகள் கங்கணம் கட்டி வருகின்றன.

இந்நிலையில், பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் நரேந்திரமோடி பேச இருந்த கூட்டத்தை சீர்குலைப்பதற்காக கூட்டம் நடக்கவிருந்த பகுதியிலும், ரயில் நிலையத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நடத்தி பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக நரேந்திரமோடி காப்பாற்றப்பட்டு உள்ளார். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கரவாத செயலை கண்டித்து, பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்றும் (28ஆம் தேதி), நாளையும் கண்டனப் போராட்டம் நடைபெறும். சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டனப் போராட்டம் நடக்கிறது'' எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+