மதுரை மீனாட்சிக்கு கோலாகல பட்டாபிஷேகம்: இன்று திக் விஜயம்
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

எட்டாம் திருவிழா
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை ஊடல் லீலை நடந்தது. நேற்றிரவு 7.04க்கு மேல் 7.30 மணிக்குள் அம்மன் சந்நிதி ஆறுகால் பீடத்தில் மீனாட்சியம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

மயில் வடிவ பூப்பந்தல்
இதனையொட்டி பூக்களால் அலங்கரிப்பட்ட மயில் வடிவிலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அம்மனுக்கு கிரீடம் சாற்றி, செங்கோல் வழங்கப்பட்டது.

அம்மன் செங்கோல்
மீனாட்சி அம்மனிடமிருந்து செங்கோலை பெற்று, தக்கார் கருமுத்து கண்ணனிடம் சிவாச்சார்யார்கள் வழங்கினர். அவர் சுவாமி சந்நிதி இரண்டாம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் அம்மனிடம் செங்கோலை சமர்ப்பித்தார்.

மாசி வீதியில் அம்மன் உலா
பின் மாசி வீதிகளில் தங்க வெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுவாமி வீதிவுலா வந்தனர்.

மீனாட்சி ஆட்சி
பட்டாபிஷேகம் நடைபெற்றது முதல் மதுரை நகரின் ஆட்சி பொறுப்பை மீனாட்சி அம்மன் ஏற்பதாக ஐதீகம். சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள் அம்மன் ஆட்சி நடக்கும்.

மீனாட்சி திக்விஜயம்
விழாவின் ஒன்பதாம் நாளாக இன்று(மே 9) திக் விஜயம் நடக்கிறது. மீனாட்சி அம்மன் தடாதகைப் பிராட்டியாக மதுரையில் அவதரித்து ஆட்சி புரிகையில் மேற்கொண்ட திக் விஜய புராணத்தை குறிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடக்கிறது.

வெற்றி லீலை
அம்மன் அஷ்ட திக்கு பாலர்களை எதிர்த்து வெற்றி பெற்ற லீலை நடக்கிறது. பின், வடக்கு மாசி-கிழக்கு மாசி வீதி சந்திப்பு லாலா ரெங்கசத்திரம் திருக்கண் மண்டபத்திற்கு இந்திர விமானத்தில் அம்மன் எழுந்தருளுவார்.

மீனாட்சி திருக்கல்யாணம்
விழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக கோயில் வடக்கு, மேற்கு ஆடி வீதி சந்திப்பில் மீனாட்சிக்கும், சொக்கருக்கும் திருக்கல்யாணம் சனிக்கிழமை (மே 10) காலை 10.30 மணிக்கு மேல் காலை 10.54 மணிக்குள் நடைபெறுகிறது.

பூப்பல்லக்கில் வீதி உலா
சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 11 மணிக்கு தனியார் சார்பில் திருக்கல்யாண விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இரவு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் அம்மன், யானை வாகனத்தில் சுவாமி வீதிவுலா வருவர்.

தேரோடும் சீரான மதுரையிலே
மே 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. நான்கு மாசிவீதிகளில் அசைந்து வரும் தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை வரும் அழகர்
சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழா மே 14ம் தேதி நடைபெறுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications