ரஜினியை கண்டு அரசியல்வாதிகளுக்கு அச்சம்... பழ.கருப்பையா பொளேர்
Recommended Video
சிவகங்கை: நடிகர் ரஜினிகாந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை கண்டு அரசியல்வாதிகள் அச்சப்படுவதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று இருக்கும் எந்த தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்றும், அதனால் மக்கள் செல்வாக்கு இருக்கிறவர்களை பார்த்தால் மிரள்கிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார். காங்கிரஸ், அதிமுக, திமுக, என பல கட்சிகளில் இருந்த பழ.கருப்பையா இப்போது தனது இலக்கியப் பணிகளை மட்டும் கவனித்து வருகிறார். காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் இதனைக் கூறினார்.

ரஜினிகாந்த் தவறான கருத்தைக் கூறினால் அதற்காக அரசியல்வாதிகள் போராடவே தேவையில்லை, மக்களே அவரை புறக்கணித்துவிடுவார்கள் என்றும், திராவிடத்தை உயர்த்தி பிடித்த பெரியார் ஆரியத்தை இழிவுப்படுத்த நினைத்தது ஒன்றும் குற்றமான செயலல்ல எனவும் பழ.கருப்பையா தெரிவித்துள்ளார். சமூக விழிப்புணர்வு வேண்டி பெரியார் செய்த காரியங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுகவில் இருந்து விலகி சுமார் இரண்டு மாத காலம் அமைதியாக இருந்த பழ.கருப்பையா இப்போது மீண்டும் அரசியல் தொடர்பாக கருத்து கூறத் தொடங்கியுள்ளார். ரஜினிகாந்துக்கு ஆலோசனை கூறும் வட்டத்தில் பழ.கருப்பையாவும் இணைய உள்ளார் என்றும், அதனால் தான் அவர் திமுகவை உதறிவிட்டு வெளியேறினார் எனவும் அப்போது கூறப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையிலேயே பழ.கருப்பையாவின் பேட்டிகளும், கருத்துகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு இணையாக தமிழகத்தில் உள்ள எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை என்ற பழ.கருப்பையாவின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரஜினி தொடங்கும் புதிய கட்சியில் பழ.கருப்பையாவுக்கு முக்கிய பொறுப்பு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications