22 பேரிடம் ரூ. 2 கோடி பெற்று வேலை.. சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலம்.. சிக்கும் பெருந்தலைகள்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு செய்தது குறித்து சித்தாண்டி பரபரப்பு வாக்குமூலத்தை போலீஸாரிடம் அளித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை சிபிசிஐடி டிஜிபி ஜாபர்சேட்டின் மேற்பார்வையில் நடைபெறுகிறது.

இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 21 பேரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான சென்னை போலீஸ்காரர் சித்தாண்டி சிவகங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் வேறு சிலருக்கும் இவர் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள்களை முன் கூட்டியே கொடுத்திருக்கிறார்.

முத்துக்குமார் கைது

முத்துக்குமார் கைது

மேலும் விடைத்தாள்களில் முறைகேடாக விடைகளையும் மாற்றியுள்ளார். இதில் சித்தாண்டியின் மனைவி சண்முகப்பிரியா, சித்தாண்டியின் இரு சகோதரர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் காவல் துறையைச் சேர்ந்த சிலரையும் போலீஸார் கைது செய்து வருகின்றனர். இதில் ஏற்கெனவே சென்னை ஆயுதப்படையில் வேலை பார்த்து வந்த முத்துக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூபதி

பூபதி

இந்த நிலையில் சித்தாண்டியை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வந்த பூபதி என்ற போலீஸ்காரரும் கைது செய்யப்பட்டார். சித்தாண்டியும் பூபதியும் இணைந்து முறைகேடாக இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து குரூப் 2ஏ மூலம் அரசு வேலையில் சேர்த்துவிட்டுள்ளனர்.

ஜெயக்குமார்

ஜெயக்குமார்

இதுகுறித்து சித்தாண்டி அளித்த வாக்குமூலத்தில், இடைத்தரகர் ஜெயக்குமார் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஆட்களை அரசு வேலையில் நுழைத்துவிட்டார். நான் 2 கோடி ரூபாய் பணம் வாங்கி 22 பேரை வேலையில் சேர்த்துவிட்டேன். குரூப் 4 தேர்வில் 15 பேரும், குரூப் 2 ஏ தேர்வில் 7 பேரையும் சேர்த்துவிட்டேன். நான் ஜெயக்குமாரிடம் இந்த பணத்தை எல்லாம் நேரடியாக கொடுக்கவில்லை.

போலீஸ்

போலீஸ்

முத்துக்குமாரிடம் கொடுத்து அவர் விழுப்புரம் மாவட்டம் அரியூர் விஏஓவாக உள்ள நாராயணனிடம் கொடுத்து அவர் அந்த பணத்தை ஜெயக்குமாரிடம் கொடுத்துள்ளார். வேலை கிடைக்காவிட்டால் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார். இதையடுத்து விஏஓ சக்தியை கைது செய்ய போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் ஒவ்வொருவராக கைது செய்யப்படும் நிலையில் நிச்சயம் பெருந்தலைகள் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+