சென்னையை மிரட்டும் பெரு மழை.. 5 மணிக்கே இருண்டதால் மக்கள் பீதி!
சென்னையை கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னையை கருமேகங்கள் சூழ்ந்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதேநேரத்தில் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் பேய் மழை கொட்டி வருகிறது.
வட கிழக்கு பருவமழை தொடக்கத்திலேயே வெளுத்து வாகி வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
காலை முதல் கொட்டித் தீர்த்த கனமழை பிற்பகலில் சற்று இளப்பாறியது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியுள்ளது.
5 மணிக்கே இருண்ட சென்னை
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இதனால் சென்னை மாநகர் மாலை 5 மணிக்கே 7 மணி போல் இருண்டு போயுள்ளது.
வேகமாக வீடு திரும்புகின்றனர்
மிரட்டும் கரு மேகங்களால் மீண்டும் ஒரு பெரிய கனமழை கொட்டித் தீர்க்கும் என மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால் அலுவலகம் சென்றுள்ளவர்கள் வேகவேகமாக வீடு திரும்பி வருகின்றனர்.
இடி மின்னலுடன் பேய் மழை
அதேநேரத்தில் புறநகர் பகுதிகளான குரோம்பேட், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் பேய் மழை கொட்டி வருகிறது. மழையால் சென்னையின் பல இடங்களில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நத்தை வேகத்தில் வாகனங்கள்
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன. இதனால் வேலை முடிந்து வீடு திரும்புவோர் பெரும் அவதியடைந்துள்ளனர்.
மாணவர்களை அனுப்புங்கள்
மழைக் காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளும் முன்கூட்டியே வகுப்புகளை முடித்து மாணவர்களை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வீட்டிற்கு அனுப்ப ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டிருந்தார்.
மிக கனமழை பெய்யும்
இன்று முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.