நெல்லையில் வேகமாக பரவும் பன்றிக்காய்ச்சல் ...பீதியில் பொதுமக்கள்!
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை : நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் பன்றிக்காயச்சால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசும் பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவருக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளித்துவருகிறது. ஆனாலும் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் குறைந்த பாடு இல்லை.

தமிழகம் மட்டும் இல்லாமல் புதுச்சேரியில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நெல்லை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3 பேர் உயிழந்துள்ளனர். இதனால் நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக நெல்லை சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறியதாவது:
நெல்லை மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் பாதிப்பு கடந்த சில நாட்களாக சிலருக்கு ஏற்பட்டு வருகிறது. இதுவரை இந்த காய்ச்சலுக்கு 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்ப கட்டத்தில் சிகிச்சைக்கு வந்த 4 பேர் குணமாகி சென்று விட்டனர். 3 பேர் பன்றி காய்ச்சலால் நம் மாவட்டத்தில் உயிர் இழந்துள்ளனர். தற்போது நான்கு பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பன்றி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை டாக்டர்கள் ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்த பன்றி காய்ச்சல் மூன்று கட்டமாக பரவுகிறது. முதல் கட்டமாக நோயாளிக்கு குறைந்த அளவில் சளி, இருமல், தொண்டை வலி இருக்கும். சிலருக்கு வாந்தி, அல்லது வயிற்று போக்கு இருக்கும். இவர்கள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். குடும்ப நபர்களுக்கும் பரவாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது கட்டமாக அதிக காய்ச்சல், தொண்டை வலி ஏற்படும். இதற்கு அடுத்த கட்டமாக மூச்சு விட திணறுதல், நெஞ்சு வலி, இரத்த அழுத்தம் குறைதல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications