காற்றாடி மாஞ்சா நூல் தொழிற்சாலைக்கு சீல்- விற்பனை செய்த 175 பேர் அதிரடிக் கைது
சென்னை: சென்னையில் காற்றாடி மாஞ்சா நூல் தயாரித்த தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. காற்றாடி மாஞ்சா நூல் விற்பனை செய்த 175 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று பெரம்பூர் ரயில்வே மேம்பாலத்தில் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற அஜய் என்ற சிறுவன் மாஞ்சா நூலால் கழுத்து அறுக்கப்பட்டு பரிதாபமாக இறந்து விட்டான்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மாஞ்சா நூல் மூலம் காற்றாடி விடுபவர்கள், காற்றாடி விற்பவர்கள், மாஞ்சா நூல் தயாரிப்பவர்களை வேட்டையாடி பிடிக்கும்படி போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

2 சிறுவர்கள் கைது:
சிறுவன் அஜய் இறப்புக்கு காரணமான மாஞ்சா நூல் காற்றாடி பறக்க விட்ட 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மாஞ்சா நூலை விற்பனை செய்த சென்னை கொன்னூர் நெடுஞ்சாலையில் குமரன் பேன்சி கடை நடத்தி வரும் பிரதீப் மற்றும் குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டனர்.
30 வருடங்களாக விற்பனை:
மேலும் ஒருவரான முருகன் மாஞ்சா நூலை தனது வீட்டில் வைத்து தயாரித்து கடந்த 30 வருடங்களாக விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. முருகன் வீடு கொரட்டூர், சிவலிங்கபுரம், குமரன் நகரில் உள்ளது. அந்த வீட்டில் துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான் ஜோசப் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உக்கிரபாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
மாஞ்சா நூல் பறிமுதல்:
சோதனையில் முருகனின் வீடு, மாஞ்சா நூல் தயாரிப்பு தொழிற்சாலை போல செயல்பட்டது கண்டறியப்பட்டது. சோதனையில் மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் எந்திரம் மற்றும் மாஞ்சா நூல் பண்டல்கள் ஏராளமாக பறிமுதல் செய்யப்பட்டன. மாஞ்சா நூல் தொழிற்சாலை சீல் வைத்து மூடப்பட்டது.
சென்னை முழுவதும் வேட்டை:
கடந்த ஒரு வாரமாக சென்னை முழுவதும் போலீசார் அதிரடி சோதனை வேட்டை நடத்தி, மாஞ்சா நூல் விற்பனை தொடர்பாக 173 வழக்குகள் பதிவு செய்தனர். 175 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் வேட்டையில் மாஞ்சா நூல் பண்டல்கள் 85, சாதாரண வெள்ளை நூல் பண்டல்கள் 120, மாஞ்சா நூல் தயாரிக்க பயன்படும் வஜ்ரம் 2 கிலோ, கலர் பொடி 2 கிலோ, கண்ணாடி தூள் 7 கிலோ, கந்தக பொடி அரை கிலோ போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.
சோதனை தொடரும்:
தொடர்ந்து சோதனை நடத்தப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர். வாரம் இருமுறை காற்றாடி வழக்குகள் பற்றி கூடுதல் கமிஷனர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்களும் இது தொடர்பாக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கமிஷனர் வெளியிட்டுள்ள 25 அறிவுரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பேரணி:
மேலும் சென்னை நகர் முழுவதும் காற்றாடி பறக்கவிடப்படும் பகுதிகளை தேர்வு செய்து, அங்கு காற்றாடியால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் ஆலோசனை கூட்டங்களை நடத்திட வேண்டும் என்றும் கமிஷனர் ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி நேற்று சென்னை வியாசர்பாடி உள்ளிட்ட சில இடங்களில் காற்றாடியின் தீமை பற்றிய பேனர்களை ஏந்தியபடி விழிப்புணர்வு ஊர்வலங்களை போலீசார் நடத்தினார்கள்.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications