வைரலாகிறது #பாசிசபாஜகஒழிக.. மாணவி சோபியா கைதுக்கு மக்கள் கடும் கோபம்
சென்னை: மாணவி சோபியாவை பாஜக ஒழிக என்று கூறியதற்காக கைது செய்த செயல் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தார். அதே விமானத்தில் பயணித்த பிஎச்டி மாணவி சோபியா, பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கும், தமிழிசைக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது.
இந்த நிலையில் சோபியாவை போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். இது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் #பாசிசபாஜகஒழிக என்ற வார்த்தையை ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.
|
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதா
ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதா. சாதாரண மக்கள் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதா என்று அலெக்ஸ் பாண்டியன் என்பவர் கேட்டுள்ளார்.
|
மொத்தப் பேரையும் கைது செய்ய வேண்டும்
பாஜக ஒழிக என்று சொன்னதுக்கு கைது பண்ணனும்னா 40 பேர் தவிர தமிழ்நாட்டின் மொத்த பேரையும் கைது பண்ணணும். பார்த்துக்கோங்க...ஜெயில் பத்தாது என்று பத்திரிகையாளர் கவின்மலர் கூறியுள்ளார்.
|
சொன்னது சரிதானே
அந்த பெண்ணை காவல்துறை கைது செய்துள்ளது அப்போ #பாசிசபாஜகஒழிக தானே
|
நானும் சொல்கிறேன்
நானும் சொல்கின்றேன்! "பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!"












Click it and Unblock the Notifications