கொடைக்கானலில் கொட்டும் பனி – குளிரில் நடுங்கும் மக்கள்
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: கொடைக்கானலில் கொட்டித் தீர்க்கும் பனியால் சுற்றுவட்டாரமே குளிர்ந்துபோய் காணப்படுகின்றது.
கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மழை பெய்வதும், பின் பனிமூட்டத்தால் கடுங்குளிரும் நிலவுகிறது. நேற்று காலை 11 மணி முதல் லேசான சாரல் மழையும், தொடர்ந்து பனிமூட்டம் நிலவியது.

குறைந்தளவே சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். குளிரில் ஏரியில் படகு சவாரி, குதிரை சவாரி செய்து மகிழ்ந்தனர். நேற்று அதிகபட்சமாக 13.6 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும், குறைந்த பட்சமாக 11.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் பதிவானது. காற்றில் ஈரப்பதம் நூறு சதவிகிதமாக இருந்தது.
கடுங்குளிர் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைமுடங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications