குடிநீர் கேட்டு பஞ்சாயத்து தலைவர், 5 கவுன்சிலர்களை ஆபீஸில் பூட்டி மக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் அருகே குடிநீர் கேட்டு மக்கள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை அடுத்து உள்ள கெங்கவல்லி ஊராட்சிக்கு உட்பட்டது நடுவலூர். அந்த கிராமத்தில் கடந்த 2 மாதமாக ஒழுங்காக குடிநீர் வினியோகிக்கப்படவில்லையம். இது குறித்து ஊர் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு அவர்கள் ஊராட்சிமன்ற தலைவர் பெரியதுரை மற்றும் 5 கவுன்சிலர்களை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.

குடிநீர் கேட்டு பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+