குடிநீர் கேட்டு பஞ்சாயத்து தலைவர், 5 கவுன்சிலர்களை ஆபீஸில் பூட்டி மக்கள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் அருகே குடிநீர் கேட்டு மக்கள் ஊராட்சிமன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்களை அலுவலகத்தில் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவை அடுத்து உள்ள கெங்கவல்லி ஊராட்சிக்கு உட்பட்டது நடுவலூர். அந்த கிராமத்தில் கடந்த 2 மாதமாக ஒழுங்காக குடிநீர் வினியோகிக்கப்படவில்லையம். இது குறித்து ஊர் மக்கள் பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் இன்று ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஊராட்சிமன்ற தலைவர் பெரியதுரை மற்றும் 5 கவுன்சிலர்களை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டி போராட்டம் நடத்தினர்.
குடிநீர் கேட்டு பொதுமக்கள் நடத்திய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications