நேதாஜி குறித்த உண்மையை தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம்- வைகோ எச்சரிக்கை
நெல்லை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மாயமான சம்பவம் தொடர்பாக உண்மையான தகவல்களை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தெரிவிக்காவிட்டால் நாடாளுமன்றத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இந்திய சுதந்திர போரட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 119 பிறந்தநாளை ஓட்டி பாளை ஜவஹர் மைதானத்தில் பொது கூட்டம் நடந்தது.

இது கலந்து கொண்ட மதிமுக பொது செயலாளர் வைகோ , " நமது நாட்டின் சுதந்திர போராட்ட தலைவர்களின் ஓருவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உலகிலேயே சிறந்த தலைவர் ஆவார். பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடியதற்காக அவர் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திர போராட்ட காலத்தில் அவர் சென்னையில் மூன்று நாள் தங்கி அங்கு நடந்த பொது கூட்டத்தில் பேசினார். பின்னர் அவரை கைது செய்த காவல் துறை அவரை மேற்கு வங்கத்தில் சிறையில் அடைத்தது.

அங்கிருந்து அவர் தப்பி ஜெர்மன் நாட்டுக்கு சென்று ஹிட்லரை சந்தித்தார். ஹிட்லரை சந்திக்க பல தலைவர்கள் பயந்த நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஹிட்லரிடம் நீங்கள் எழுதிய புத்தகத்தில் இந்தியர்களை பற்றி தவறாக எழுதியுள்ளேர்கள், அதனை நீக்க வேண்டும் என துணிச்சலுடன் தெரிவித்தார்.
இந்திய தேசிய படைக்கு தலைமை வகித்து ஜப்பான் படையுடன் சேர்ந்து பிரிட்டிஷ் ராணுவத்தை எதிர்த்தார். இதில் முதலில் அவர் வெற்றி பெற்றாலும், பின்னர் மழை, மற்றும் அமெரிக்க, ரஷ்ய நாடுகள் போரில் இறங்கியதால் அவர் தோல்வியடைந்தார்.

இதனால் ஜப்பான் பின் வாங்கியது. அப்படிப்பட்ட மகத்தான தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறந்து விட்டதாக ஜப்பானும், இந்தியாவும் அறிவித்தது. ஆனால் அவர் ரஷ்ய நாட்டின் சைபீரியா சிறையில் இருப்பதாக ரஷ்ய மற்றும் ஜெர்மன் உளவாளிகள் இந்திய தலைவர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் அதை ஏற்று கொள்ளவில்லை. நேரு உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் நேதாஜி தொடர்பான உண்மையான ஆவணங்களை வெளியிடவில்லை.
உலகம் சுற்றும் வாலிபரான பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேதாஜி தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று காட்டத்துடன் தெரிவித்தார்.

சென்னையில்...
முன்னதாக நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற வைகோ நேதாஜியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications