தொகுதி மாறினால் ரூ. 25 கொடுத்து புது அடையாள அட்டை பெறலாம் - தலைமை தேர்தல் அதிகாரி சக்சேனா
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் போன்றவற்றுக்காக 3 கட்டங்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு பெயர் சேர்ப்பு, நீக்கம் மற்றும் முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை ஆர்வமுடன் அளித்தனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சத்து 15 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் புதிய வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்காக 15 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மீதம் உள்ள விண்ணப்பங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் செய்வதற்காக பெறப்பட்டுள்ளன.

முகவரி மாற்றம் செய்ய விரும்புகிறவர்கள் பழைய வாக்காளர் அட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம். பூத் சிலிப்பில் முகவரி மாற்றம் செய்து வழங்கப்படும். இதனை பயன்படுத்தி ஓட்டு போடலாம். முகவரி மாற்றம் செய்யப்பட்டவர்கள் தனியாக வாக்காளர் அடையாள அட்டை வேண்டும் என்றால் ரூபாய் 25 செலுத்த வேண்டும்.
புதிதாக பெயர் சேர்க்க விரும்புகிறவர்கள் பெயர் சேர்க்கும் படிவம் 6 உடன் "001" படிவத்தையும் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த விண்ணப்பம் ஆன் லைனில் இருப்பதால் அதன் மூலமும் விண்ணப்பிக்கலாம். கிராம அளவில் வீடுகள் தோறும் தேவைப்படுபவர்களுக்கு 001 விண்ணப்பம் வழங்கப்பட உள்ளன.
இந்த விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பத்தின் நிலை என்ன என்பதை தெரிந்துகொள்வதுடன், எப்போது வாக்காளர் அட்டை வந்து கிடைக்கும் என்ற தகவலும் விண்ணப்பதாரரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும். புதிதாக பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பம் அளிப்பவர்களுக்கு இலவசமாகவும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்!












Click it and Unblock the Notifications