For Quick Alerts
For Daily Alerts
Just In
பிள்ளையார்குப்பத்திற்கு ஆய்வுக்கு சென்ற கிரண் பேடியை முற்றுகையிட முயன்ற மக்கள்
புதுச்சேரி: பிள்ளையார்குப்பத்தில் ஆய்வுக்கு செய்ய சென்ற ஆளுநர் கிரண் பேடியை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரான கிரண் பேடி அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர். அவர் அவ்வப்போது எங்காவது சென்று ஆய்வு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் அவர் பிள்ளையார்குப்பத்தில் ஆய்வு நடத்த சென்றார். அப்போது பொது மக்கள் அவரை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இலவச அரிசி உள்ளிட்ட அரசு நலத்திட்டங்களுக்கு கிரண் பேடி தடையாக இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக பிள்ளையார்குப்பத்திற்கு செல்வதை கிரண் பேடி சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார்.
கிரண் பேடி சமூக வலைதளங்களிலும் ஆக்ட்டிவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Commoners tried to seige Kiran Bedi, Lieutenant Governor of Puducherry when she went to Pillayarkuppan for inspection on sunday.
Story first published: Sunday, December 10, 2017, 8:24 [IST]