ஸ்டெர்லைட் ஆலை இனியும் செயல்பட்டால் மக்கள் அதனை அடித்து நொறுக்குவார்கள்: வைகோ
ஸ்டெர்லைட் ஆலை இனியும் செயல்பட்டால் மக்கள் அதனை அடித்து நொறுக்குவார்கள் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி : 12 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய பிறகும் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து செயல்பட்டால், மக்களால் அது அடித்து நொறுக்கப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று நடைபெற்ற போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியாகினர். இதனால் தமிழகத்தில் மிகுந்த கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு, அரசியல் கட்சித் தலைவர்களும் மாணவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவும் வலியுறுத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ. போராட்டத்தில் இருந்த மக்கள் யாரும் வன்முறையை கையாளவில்லை. போராட்டத்தை ஒடுக்குவதற்காக காவல்துறையினரே போலீஸ் வாகனங்களைத் தாக்கி சூறையாடி உள்ளனர்.

எந்தத் தவறும் செய்யாத அப்பாவி மக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்துள்ளது காவல்துறை. மக்கள் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்றால் ஏன் ஒரு போலீஸ் கூட உயிரிழக்கவில்லை .
இது திட்டமிட்ட சதி. இதற்கு காவல்துறையே பொறுப்பேற்க வேண்டும். மக்களைக் கொன்ற காவல்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இனியும் ஸ்டெர்லைட் ஆலை இங்கு செயல்பட மக்கள் விடமாட்டார்கள், அதனை அடித்து நொறுக்குவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications