இரண்டே மாதம்.. என்னை நீக்கியவர்களை மக்களே காலி செய்து விடுவார்கள்.. மு.கஅழகிரி சாபம்
சென்னை: இன்னும் இரண்டு மாதங்ள்தான். என்னை திமுகவிலிருந்து நீக்கக் காரணமானவர்களை மக்களே தண்டித்து விடுவார்கள் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
திமுகவிலிருந்து மு.க.அழகிரியை நிரந்தரமாக நீக்கி விட்டனர். இந்த நிலையில் இன்று திடீரென கிளம்பி சென்னைக்கு வந்தார் அழகிரி.

வந்தவர் விமான நிலையத்தில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம், என்னை நீக்கியவர்கள், என்னை நீக்கக் காரணமாக இருந்தவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை. இன்னும் 2 மாதங்களில் மக்களே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்றார் அழகிரி.
இனிமேலாவது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்வீர்களா என்ற கேள்விக்கு இல்லை, நான் போட்டியிட மாட்டேன் என்று அழகிரி தெரிவித்தார்.
அழகிரியின் சென்னை பயணத்தின்போது என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை தலைநகரம் காணப் போகிறது என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவுகிறது.












Click it and Unblock the Notifications