For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்போன் வெடித்து 5ம் வகுப்பு மாணவர் காயம்... விளையாடிக் கொண்டிருந்த போது விபத்து!

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே செல்போன் வெடித்ததில் 5ம் வகுப்பு மாணவர் ஒருவர் முகத்திலும், கைகளிலும் பலத்த காயமடைந்துள்ளார்.

பெரம்பலூர் அருகேயுள்ள எசனை கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் என்பவரது மகன் ஆதிகேசவன் (12). எசனையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் ஆதிகேசவன், தற்போது அரையாண்டு விடுமுறை என்பதால், வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.

Perambalur: School student injured in cellphone burst

அங்கு செல்போனில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார் ஆதிகேசவன். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்ததாகத் தெரிகிறது. இந்த விபத்தில் ஆதிகேசவனின் கையில் பலத்த காயமும், முகத்தில் லேசான காயமும் ஏற்பட்டது.

இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் ஆதிகேசவன்.

English summary
In Perambalur a school student was injured as a cellphone was bursted suddenly when he was using it.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X