பெரம்பலூரில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க கூட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலுரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளையின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி மதரஸா ரோடு ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஜெ.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
"உன்னையறிந்தால்" மாணவர் கல்வி மேம்பாட்டு மைய பொறுப்பாளர் பொறியாளர் கி.கலைநாதன், தேவன்பு, முனைவர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்விற்கு "காக்கைச் சிறகினிலே" இணையாசிரியர் எழுத்தாளர் இரா.எட்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இவரது உரை புதிய எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
முன்னதாக கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட கவிஞர்கள் சக்கரபாணி, சுரேஷகுமார் அன்புச் செல்வன், கணேசன், செயராமன், தெய்வீகன், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தங்கள் கவிதையை வாசித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அகவி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை பேராசிரியர். ப.செல்வக்குமார் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரும்பாவூர் தாஹிர் பாஷா, எழுத்தாளர்கள். தயாளன், அசன் முஹம்மது, பாலை செல்வம்., பொன்னொளியனார், வி.களத்தூர் கமால் பாஷா உள்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications