பெரம்பலூரில் நடைபெற்ற எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க கூட்டம்!
பெரம்பலூர்: பெரம்பலுரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டக்கிளையின் சிறப்புக் கூட்டம் 28ஆம் தேதி மதரஸா ரோடு ரெட்டியார் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் ஜெ.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ஆ.இராமர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
"உன்னையறிந்தால்" மாணவர் கல்வி மேம்பாட்டு மைய பொறுப்பாளர் பொறியாளர் கி.கலைநாதன், தேவன்பு, முனைவர் தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்விற்கு "காக்கைச் சிறகினிலே" இணையாசிரியர் எழுத்தாளர் இரா.எட்வின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். இவரது உரை புதிய எழுத்தாளர்களுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
முன்னதாக கவிஞர்கள் பங்குபெற்ற கவியரங்கம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்ட கவிஞர்கள் சக்கரபாணி, சுரேஷகுமார் அன்புச் செல்வன், கணேசன், செயராமன், தெய்வீகன், ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தங்கள் கவிதையை வாசித்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியாக சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அகவி நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியை பேராசிரியர். ப.செல்வக்குமார் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரும்பாவூர் தாஹிர் பாஷா, எழுத்தாளர்கள். தயாளன், அசன் முஹம்மது, பாலை செல்வம்., பொன்னொளியனார், வி.களத்தூர் கமால் பாஷா உள்பட பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications