பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு?
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் 7 பேரும் வேலூர் சிறையிலும், சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. மேலும் பேரறிவாளனுக்கும் உடல் நலம் சரியில்லாததால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.

தாயார் அற்புதம்மாள் கோரிக்கை
இந்நிலையில் தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் அற்புதம்மாள் பல முறை கோரிக்கை விடுத்தார். இந்த பரோல் விவகாரம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிமுக கூட்டணி எம்எல்ஏக்களும் சட்டசபையில் எழுப்பினர்.

முதல்முறையாக பரோல்
இந்நிலையில் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக பேரறிவாளன் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியே வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.

பரோலை நீட்டிக்க கோரிக்கை
இந்நிலையில் நாளையுடன் அவரது பரோல் காலம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதால் பேரறிவாளனுக்கு பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?
இந்த கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகமும் ஆலோசனை செய்து வந்தனர். இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications