பேரறிவாளனுக்கு மூட்டு வலி, சிறுநீரகப் பிரச்சினை.. மருத்துவமனையில் சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு மூட்டு வலியும், சிறுநீரகப் பிரச்சினையும் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அவர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூட்டு வலியும், சிறுநீரகப் பிரச்சினையும் ஏற்பட்டதால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து இன்று அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிறை அதிகாரிகள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அங்கு அவருக்கு 4 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.












Click it and Unblock the Notifications