வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தம்மை துயரக்கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கண்ணீர் கடிதம்:
அழாதீர்கள் அம்மா... உங்கள் மகன்தான் உங்களுடன் சேரப்போகீராறே என்று எனை ஈன்றவள் கரம் பற்றி கலங்காதீர்கள் அம்மா என ஒரு தாயின் பரிவோடு எனது தாயிடம் உரைத்து கண்ணீரை துடைத்து விட்ட அம்மா இப்போது வங்கக் கடலோரம் துயிலப் போய் விட்டார்.

23 ஆண்டுகால தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தருணமாக அது இருந்தது. 2011ஆம் ஆண்டு மூவர் உயிர்காக்க இயற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானத்திலும், 2014இல் ஏழு பேரின் விடுதலை தீர்மானத்திலும் அவர் கையாண்ட " திருவாளர்கள்" என்ற சொல்லின் ஆழமும், அது சொல்லி சென்ற கதைகளும் ஏராளம். கொலைகாரன் என்று குத்தி கிழித்திட்ட கொடூரத்தில் இருந்து மீட்டு மருந்திட்ட மரியாதைக்குரிய சொல் அது.
வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம் pic.twitter.com/7BWlpifRvT
— Oneindia Tamil (@thatsTamil) December 16, 2016
மூவர் தூக்கு, எழுவர் விடுதலை மட்டுமல்லாமல் ஈழ விடுதலை,காவிரி விவகாரம், முல்லை பெரியாறு நீர் பங்கீடு என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் அவர் போராடிய விதம் எவருக்கும் வாய்த்திராத வரம். சாமானிய மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே செயலாற்றி, மக்கள் பணியிலேயே உயிர் துறந்துள்ளார் ஜெயலலிதா.
அவரது கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன என்று பேரறிவாளன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அவரது மறைவு பேரறிவாளனுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications