வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தம்மை துயரக்கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவின் கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன் என்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கண்ணீர் கடிதம்:
அழாதீர்கள் அம்மா... உங்கள் மகன்தான் உங்களுடன் சேரப்போகீராறே என்று எனை ஈன்றவள் கரம் பற்றி கலங்காதீர்கள் அம்மா என ஒரு தாயின் பரிவோடு எனது தாயிடம் உரைத்து கண்ணீரை துடைத்து விட்ட அம்மா இப்போது வங்கக் கடலோரம் துயிலப் போய் விட்டார்.

23 ஆண்டுகால தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தருணமாக அது இருந்தது. 2011ஆம் ஆண்டு மூவர் உயிர்காக்க இயற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானத்திலும், 2014இல் ஏழு பேரின் விடுதலை தீர்மானத்திலும் அவர் கையாண்ட " திருவாளர்கள்" என்ற சொல்லின் ஆழமும், அது சொல்லி சென்ற கதைகளும் ஏராளம். கொலைகாரன் என்று குத்தி கிழித்திட்ட கொடூரத்தில் இருந்து மீட்டு மருந்திட்ட மரியாதைக்குரிய சொல் அது.
வங்கக் கடலோரம் துயிலப் போய்விட்டாரே: ஜெயலலிதா மறைவுக்கு பேரறிவாளன் கண்ணீர் கடிதம் pic.twitter.com/7BWlpifRvT
— Oneindia Tamil (@thatsTamil) December 16, 2016
மூவர் தூக்கு, எழுவர் விடுதலை மட்டுமல்லாமல் ஈழ விடுதலை,காவிரி விவகாரம், முல்லை பெரியாறு நீர் பங்கீடு என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் அவர் போராடிய விதம் எவருக்கும் வாய்த்திராத வரம். சாமானிய மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே செயலாற்றி, மக்கள் பணியிலேயே உயிர் துறந்துள்ளார் ஜெயலலிதா.
அவரது கைகளால் விடுதலை பெற்று எனது அன்னையோடு சென்று நேரில் நன்றி கூறி மகிழ வேண்டும் என்ற பெருங்கனவோடு காத்திருந்த நான் கடற்கரை மணல் பரப்பில் கல்லறையில் துயிலும் அவரை எங்ஙகனம் எதிர்கொள்ளப் போகிறேன என்று பேரறிவாளன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலைக்கு சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்ததுமட்டுமல்லாமல் சட்டப் போராட்டமும் நடத்தி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் அவரது மறைவு பேரறிவாளனுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications