தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்: கருணாநிதி, ஜெயலலிதா மரியாதை
சென்னை: சென்னை: தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் பிறந்தநாளையையொட்டி அவரது உருவப் படத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதையை செலுத்தினார்.
தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.இராமசாமி கடந்த 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதியன்று ஈரோட்டில் பிறந்தார். ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிக்கும் சமூக சீர்திருத்ததிற்காவும், மூட நம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும் போராடிய பகுத்தறிவாளர் தந்தை பெரியார்.

சமூக சீர்திருத்தத்துக்காக திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவர். பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய சமூக போராளி. சமூக சீர்திருத்தத்தின் தந்தை. தென்னாசியாவின் சாக்ரடீஸ் என்றும் போற்றப்பட்டவர் தந்தை பெரியார்.

இவரது 138வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், அக்கட்சியின் பொருளாளரும், எதிர்கட்சி தலைவருமான ஸ்டாலின் உள்ளிட்டோரும் உடன் சென்று மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில், தந்தை பெரியாரின் படத்திற்கு முதல்வர் ஜெயலலிதா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா பிறந்தநாளில் அண்ணாசலையில் உள்ள சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிக்க வந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை தவிர்க்கவே இன்று போயஸ் தோட்டத்தில் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் ஜெயலலிதா.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்..












Click it and Unblock the Notifications