முதல்வரின் சொந்த மாவட்டத்தில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த அப்பாவி மர்மக் கொலை - வீடியோ
சேலம் ஊத்தங்கரையில் பெருமாள் என்பவர் ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் போது மர்மமான முறையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
சேலம்: சேலம் ஊத்தங்கரையில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த விவசாயி மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது. அதனால் ஆங்காங்கே கொலை, கொள்ளை, பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துக்கொண்டுள்ளது.

நாகர்கோவில் ஆரல்வாய்மொழியில் மூதாட்டி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்ட அதிர்ச்சி இன்னும் நீங்கவில்லை. கடந்த சில மாதங்களாக பெண்களின் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு ஹாசினி உள்ளிட்ட குழந்தைகளும் தப்பிப்பது இல்லை. மூதாட்டிகளையும் விட்டுவைப்பதில்லை.
அதேபோல் பட்டபகலிலேயே கொள்ளைச் சம்பவங்கள் நடந்தேறிவருகின்றன. மிகச் சாதரணமாக நகைக் கடை முதல் சிறு வீடுகள் வரை கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்துச் செல்கின்றனர். ஆனால் இந்த குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தமிழக அர்சு எந்த நடவடிக்கைகளையும் விரைந்து செய்யவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் ஊத்தங்கரையில் வெட்டுக்கால் பாறை என்ற பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பெருமாள் என்பவரை மர்மக்கும்பல் வெட்டிகொலை செய்துள்ளது.
ஆடுமேய்க்க சென்ற அவரை வெகு நேரமாகியும் காணவில்லை என்பதால் அவருடைய வீட்டார் தேடிப் போனபோது அவர் கொலையாகி கீழே விழுந்துகிடந்தார்.
பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அன்னதானப்பட்டி போலீசார் அங்கு வந்து பெருமாள் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications