சென்னை புறநகர் பெரும்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்- தாம்பரம் சாலை மூடல்!!
சென்னை: சென்னை புறநகரில் பெரும்பாக்கம் ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
#chennairains #Chennai #rain #Perumbakkam. God bless people of Tamil Nadu. Before and after rain pics pic.twitter.com/otCpzTQKFC
— Nimit Parmar (@NimitParmar) November 16, 2015
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடைமழை விடாது கொட்டி வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Before and after in Perumbakkam #Chennai #chennairains pic.twitter.com/TvbC6cwAL9
— raj.r (@ChennaiRains1) November 16, 2015
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் நிரம்பியதால் அடையாறு, கொற்றலை, கூவம் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரியும் நிரம்பி உபரி நீர் வெளியேறியுள்ளது.
@chennaiweather @dhanyarajendran @karthickselvaa Water bursts through Perumbakkam lake into perumbakkam road pic.twitter.com/chImXo6QrP
— Indian (@iamparthiban) November 16, 2015
ஏற்கனவே அந்த பகுதியில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் ஏரி நீரும் வெளியேறி வருவதால் ஒட்டுமொத்தமாக சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், கிழக்கு தாம்பரம் பகுதிகள் தனித் தீவாக மாறியுள்ளன.
@narvind0110 @techrsr there is a nesavalar nagar lake near perumbakkam .. That's overflowing .. The green patch pic.twitter.com/2krFjj193g
— SreeV (@SreekrishnanV) November 16, 2015
மேலும் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையும் வெள்ளத்தால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.