For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புறநகர் பெரும்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்- தாம்பரம் சாலை மூடல்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை புறநகரில் பெரும்பாக்கம் ஏரி நிரம்பியதால் உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடைமழை விடாது கொட்டி வருகிறது. இதனால் இம்மாவட்டங்களில் அனைத்து ஏரிகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஏரிகள் நிரம்பியதால் அடையாறு, கொற்றலை, கூவம் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரியும் நிரம்பி உபரி நீர் வெளியேறியுள்ளது.

ஏற்கனவே அந்த பகுதியில் மழை வெள்ள நீர் தேங்கியுள்ள நிலையில் ஏரி நீரும் வெளியேறி வருவதால் ஒட்டுமொத்தமாக சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சேலையூர், கிழக்கு தாம்பரம் பகுதிகள் தனித் தீவாக மாறியுள்ளன.

மேலும் சோழிங்கநல்லூர், மேடவாக்கம் வழியாக தாம்பரம் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது. பல்லாவரம்- துரைப்பாக்கம் ரேடியல் சாலையும் வெள்ளத்தால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Perumbakkam lake was breached in Chennai on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X