சட்டசபை தேர்தல்: திமுகவுக்கு என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆதரவு
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இன்று கடிதம் வழங்கினார்.
சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அனைத்து கட்சிகளுமே கூட்டணி அமைக்க முயற்சிகள் எடுத்து வருகின்றன. தனித்து போட்டி என கூறிவந்த அதிமுகவும், நேரத்திற்கு தக்கபடி முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துவிட்டது.

திமுக ஆரம்பம் முதலே கூட்டணி கதவுகளை திறந்து வைத்துள்ளது. பெரிய கட்சிகள் எதுவும் இதுவரை திமுகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றபோதிலும், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட குட்டி கட்சிகள் திமுகவுக்கு தங்கள் ஆதரவு இருப்பதை தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து இன்று கடிதம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.தனபாலன், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற பாடுபடுவோம் என்றார்.












Click it and Unblock the Notifications