முகுல் வாஸ்னிக் முன்னிலையில் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் காங்கிரஸில் ஐக்கியம்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அனைத்து கட்சிகளுடனும் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. அதிமுக, பாஜகவுடன் நடத்தப்பட்ட இக்கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு தமாகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பின்னர் மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பொதுச்செயலர் விஸ்வநாதன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில் இன்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் காங்கிரஸில் இணைந்தனர்.
காங்கிரஸில் இணைந்த பீட்டர் அல்போன்ஸுக்கு தென்காசி சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என கூறப்படுகிறது.