முகுல்வாஸ்னிக் முன்னிலையில் இன்று 'தாய்வீடு' திரும்புகிறார் பீட்டர் அல்போன்ஸ்
சென்னை: தமாகாவில் இருந்து விலகிய மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக் முன்னிலையில் இன்று காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைகிறார்.
சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஒரே கட்சி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிதான். திமுக, அதிமுக கதவுகளைச் சாத்திய நிலையில் பாரதிய ஜனதா கட்சி வரவேற்றது.

கடைசியாக வேறுவழியே இல்லாமல் தேமுதிக- மக்கள்நலக் கூட்டணியில் தமாகா ஐக்கியமானது. இதற்கு தமாகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தமாகா நிர்வாகிகள் காங்கிரஸில் மீண்டும் இணைந்து வருகின்றனர்.
இதனிடையே தமாகாவின் கூட்டணி முடிவை ஏற்க முடியாது என கூறி மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி விஸ்வநாதன் உள்ளிட்டோரும் கட்சியில் இருந்து விலகிவிட்டனர். இவர்கள் இன்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் முன்னிலையில் மீண்டும் 'தாய்வீடான' காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப உள்ளனர்.












Click it and Unblock the Notifications