தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு.. மர்ம நபர்கள் தப்பியோட்டம்

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை வளாகத்திற்குள் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுகுறித்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

தூத்த்துகுடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை மக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிப்பதாகக் கூறி கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலான அந்த ஆலையைச் சுற்றி உள்ள மக்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

Petrol bomb thrown at Sterlite Industry Campus

இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் திடீரென ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் குண்டுகளை வீசிச்சென்றதாக தெரியவந்ததை அடுத்து, அந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+