ஒரு நாள் குறைத்துவிட்டு தினமும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை.. இன்றும் உயர்வு!
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: எப்போதும் போல இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
பெட்ரோல் டீசல் விலை தினமும் 50 பைசா வீதம் மீண்டும் பெட்ரோல் டீசல் விலை உயர தொடங்கி உள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
ஆனால் அதன்பின்பு தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.இந்த நிலையில் நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 31 காசுகள் அதிகரித்துள்ளது.
இன்று சென்னையில் பெட்ரோல் 24 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.50 ஆக விற்கிறது. டீசல் 31 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.78.35 ஆகவும் விற்பனை ஆகிறது.
[தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!]
தொடர்ந்து பெட்ரோல் விலை உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் வரிவிதிப்பு முறையும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.