புதிய உச்சத்தை தொட்டது பெட்ரோல், டீசல் விலை.. வரலாறு காணாத உயர்வு!
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் ஏற்றம் கண்டு இருக்கிறது.
சென்னை: பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் ஏற்றம் கண்டு இருக்கிறது. 30 பைசா வரை பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் கண்டு இருக்கிறது.
தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது.

பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே சொல்கிறது. கடந்த மே மாதம் மிக அதிக அளவில் உயர்த்தப்பட்டது.
கர்நாடக தேர்தலுக்கு பின் ஒரே நாளில் 4 ரூபாய் உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை 80 ரூபாயை எட்டியது.அதன்பின்பும் பைசா கணக்கில் தினமும் உயர்த்தப்பட்டு வந்த பெட்ரோல் தற்போது இமாலய விலையை அடைந்துள்ளது.
தற்போது சென்னையில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்தது. தற்போதைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.11 காசுகளாகும். டீசல் விலை 42 காசுகள் அதிகரித்துள்ளது. தற்போதைய டீசல் விலை லிட்டருக்கு ரூ.75.91 காசுகளாகும். இது மக்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications