2 நாட்கள் கழித்து பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு: சென்னையில் 1 லிட்டர் ரூ. 85.58
சென்னை: பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் மாற்றம் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்த்தப்பட்டு வருகிறது.
கடந்த 2 நாட்களாக தான் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இன்று பெட்ரோலின் விலை 10 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 85.58க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் நேற்றைய விலையான ரூ. 78.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மகராாஷ்டிராவின் ஒரு சில பகுதிகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90க்கு விற்பனை செய்யப்படுகிறது. தினமும் விலை உயர்த்தப்படுவதை பார்த்தால் இன்னும் சில நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100க்கு விற்பனையானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.