ஏப்ரல் 5ல் தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும்.. திமுக போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு
காவிரி பிரச்சனைக்காக ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு பெட்ரோல் பங்க்குகளின் சங்கம், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.
சென்னை: காவிரி பிரச்சனைக்காக ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு பெட்ரோல் பங்க்குகளின் சங்கம், லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளார்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் 5ம் தேதி தமிழகம் தழுவிய மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 5 -ம் தேதி திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு அதிமுக, பாஜக தவிர்த்து பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தமிழ்நாடு பெட்ரோல் பங்க்குகளின் சங்கம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 5-ம் தேதி பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் திமுக நடத்த இருக்கும் போராட்டத்துக்கு காஞ்சிபுரம் லாரி உரிமையாளர் சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். காஞ்சிபுரத்தில் 3000 லாரிகள் வரை போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறப்படுகிறது. 10,000 பேர் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications