For Quick Alerts
For Daily Alerts
Just In
காவிரி: ஏப்ரல் 2-ல் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு
காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைக்கப்படவுள்ளது.
Recommended Video
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் -வீடியோ
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மருந்து கடைகள் அடைக்கப்படவுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தவில்லை. இதை கண்டித்து தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ஆளும், எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மருந்து கடைகளை மூட தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வன் அறிவித்துள்ளார்.
அதில் தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைத்து ஏப்ரல் 2-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Pharmacies in Tamilnadu closes on April 2 in the issue of Cauvery.
Story first published: Friday, March 30, 2018, 14:28 [IST]