தமிழக அரசின் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்ய வலியுறுத்தல்
பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை ரத்து செய்ய வேண்டும் என்று பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video

சென்னை : பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தால், அதன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஜி.சங்கரன், தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் தடை செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதன் மூலம், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் பதிவுபெற்ற பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 95% சிறு மற்றும் குறு தொழிலைச் சார்ந்தவை.
இவற்றின் மூலம் நேரடியாக 2 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். அவர்களில் 70% பேர் பெண்கள். இதில், வட்டிக்கு கடன் வாங்கி, எந்திரங்களைக் கொள்முதல் செய்து பலர் தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பு எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால எங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். கடந்த 2004ம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிளாஸ்டிக் தடை மசோதா கொண்டு வருவது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்த உண்மை நிலைகளை அவர் தெரிந்து கொண்டதால் அவர் அதை அமல்படுத்தவில்லை.
அதனால், அவர் வழியில் ஆட்சி நடத்துவதாக சொல்லும் தற்போதைய முதல்வரும் , இதைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை திரும்பபெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
-
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications