திருக்கோவிலூர்: அரசு சேவை இல்லத்தில் பிளஸ் 1 மாணவி துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை
பிளஸ் 1 மாணவி துப்பாட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே பிளஸ் 1 மாணவி ஒருவர் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருக்கோவிலூர் அருகே உள்ள கூடலூர் செம்மண்டலம் பகுதியில் அரசு சேவை இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அரசு சேவை இல்லத்தில் தங்கி பவித்ரா என்ற மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். பவித்ராவின் வயது 15. அம்மா- அப்பாவை இழந்தவர் இவர். அதனால் உறவினர்கள் உதவியால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த சேவை இல்லத்தில்தான் படித்து வந்தார். கடந்த மாதம் கோடை விடுமுறையின்போது திருக்கோவிலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் விடுமுறை முடிந்ததும் மீண்டும் பிளஸ் 1 படிப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

ஆனால் சில நாட்களாகவே பவித்ரா கவலையுடனே காணப்பட்டார். யாருமே சரியாக பேசாமல் சோகத்துடனே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பவித்ரா காணாமல் வந்த உடன் படிக்கும் மாணவிகள் தேடி ஆரம்பித்தனர். அப்போது, சேவை இல்லத்தின் பாழடைந்த கட்டிடத்தில் சுடிதார் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியில் அலறினர்.
இதுகுறித்து சேவை இல்ல அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டு பின்னர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பவித்ராவின் தற்கொலைக்கான உடனடியாக தெரியவில்லை என்பதால் உறவினர்கள், சேவை இல்ல அதிகாரிகள், ஊழியர்கள், உடன்படிக்கும் மாணவிகளிடம் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications