தம்மிநாயக்கன்பட்டியில் பிளஸ்டூ வரை (மட்டுமே) படித்த டுபாக்கூர் "டாக்டர்" கைது!
பிளஸ் 2 படித்துவிட்டு மருத்துவர் பார்த்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேனி: பிளஸ் படித்துவிட்டு தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மலைகிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தவரை அதிகாரிகள் கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தை சுற்றியுள்ள மலையடிவாரங்களில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள இந்த பகுதி மக்களுக்கு மருத்துவ வசதி என கூறப்படுகிறது. இதனை பிளஸ் 2 படித்த ஒருவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். எதையும் நம்பக்கூடிய கிராம மக்கள்தானே என நினைத்து, தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டார்.

வீட்டிலேயே மருத்துவமனை
தம்மிநாயக்கன்பட்டியில் தன் வீட்டிலேயே ஒரு மருத்துவமனையையும் வைத்துக் கொண்டார். அதனையும் கிராம மக்கள் ஆதரித்தனர். இதில் சில நேரங்களில் ஆபிரகாம், வீடு வீடாக சென்று அங்குள்ள மக்களுக்கு மருந்து, மாத்திரை, ஊசியும் போட்டு விட்டு வருவாராம். இதனால் பின்விளைவுகளை யோசிக்காமல் பலரும் தங்கள் உயிரையும், உடலையும் அவரிடம் ஒப்படைத்து சிகிச்சை பெற்று சென்றனர்.

கையும் களவுமாக பிடிபட்டார்
ஆனால் விஷயம் அறிந்தவர்களின் காதுகளுக்கு இந்த செய்திவிட்டது. இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாரதிக்கு உடனடியாக தகவல் சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் தம்மிநாயக்கன்பட்டியில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வில் இறங்கினர். அந்நேரத்தில் ஆபிரகாம், கைதேர்ந்த டாக்டர் போல கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவரை கையும் களவுமாக சுகாதாரத்துறையினர் மடக்கி பிடித்து தேவாரம் போலீசில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

பிளஸ்2 வரை படித்தவர்
அவரை கைதுசெய்த போலீசார் கிடுக்கிப்பிடு விசாரணையை தொடர்ந்துள்ளனர். பிளஸ் 2 மட்டுமே முடித்துவிட்டு, இங்கிலீஷ் மருத்துவம் பார்த்து வந்துள்ள ஆபிகாரமின் சொந்த ஊர் கேரளாவிலுள்ள இடுக்கி என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தம்மிநாயக்கன்பட்டிக்கே வந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

மருத்துவ வசதி தேவை
மலையடிவார கிராமப்புறங்களில் போதுமான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுத்துருந்தால் இதுபோன்று மனித உயிர்களுடன் விளையாடும் துணிச்சல் யாருக்காவது வருமா? இனியாவது கிராம மக்களின் எதிர்காலம், மற்றும் அங்குள்ள குழந்தைகளின் நலன் கருதி அரசு மருத்துவ வசதி அளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications