Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளஸ்டூ தேர்வு முடிவு - கணக்குப் புலிகள் 3,882 பேர்.. தாவரவியலில் 15 பேர் மட்டுமே 200க்கு 200

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.இத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 90.6 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு கிடைத்துள்ளது. இதில் மாணவர்கள் 87.4 சதவீதமும், மாணவிகள் 93.4 சதவீதமும் தேர்வாகியுள்ளனர்.

பாடவாரியாக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.கணிதப் பாடத்தில் 3,882 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.உயிரியலில் 652 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.தமிழ்ப் பாடத்தில் 3 பேர் 198 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

Plus 2 result: subject wise centum total…

இயற்பியலில் 2710 பேர் முதலிடம் பெற்றுள்ளனர். வேதியியலில் 1693 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

மிகவும் குறைவாக தாவரவியலில் 15 பேரும், விலங்கியலில் 7 பேரும் முதலிடம் பெற்றுள்ளனர்.

வணிகவியலில் 2581 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.கணக்குப் பதிவியலில் 2403 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.வணிகக் கணிதத்தில் 605 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

போன வருடங்களை விட இந்த வருடம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவீதத்தில் ஈரோடு 97.05% பெற்று முதலிடத்தில் உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் 74.4% பெற்று கடைசி இடத்தில் உள்ளது. நாமக்கல் 96.5%, விருதுநகர் 96.12 %, பெரம்பலூர் 96.12%, ராமநாதபுரம் 93.06%, வேலூர் 85.7%, தஞ்சாவூர் 89.97%, புதுக்கோட்டை 89.7%, தூத்துக்குடி 95.72%, சிவகங்கை 93.4%, தருமபுரி 93.24%, தேனி 92.74%, திருப்பூர் 94% என்ற அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+