பனிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தட்கலில் விண்ணப்பிக்கலாம்... எப்படி? - வீடியோ
பனிரெண்டாம் வகுப்புத் துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள், தட்கல் முறை மூலம் இன்றும் நாளையும் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை: பனிரெண்டாம் வகுப்பு துணை தேர்வு எழுதும் மாணவர்கள், இன்றும் நாளையும் தட்கலில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மீண்டும் உடனே துணைத் தேர்வு எழுதி வெற்றி பெற வாய்ப்புள்ளது.
அத்துணை தேர்வை எழுத இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், இன்றும் நாளையும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மாவட்ட முதன்மை அகல்வி அதிகாரி அலுவலகத்தில், தற்காலிக மதிப்பெண் அட்டவணையைக் கான்பித்து, பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.
மேலும் திருச்சி, திருநெல்வேலி, கோவை, கடலூர், வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்னையில் உள்ள மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.