பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - தமிழகம், புதுச்சேரியில் 92.1 % பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. மொத்தம் 92.1% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை: 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தமிழகம், புதுச்சேரியில் மொத்தம் 92.1 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட அதிகமாகும்.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வி துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தேர்வு முடிவுகள் செல்போன்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதில் மாணவர்கள் 89.3% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவிகள் 94.5% மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ் 2 மாணவர்கள்
தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர்.

தனி தேர்வாளர்கள்
அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

ரிலாக்ஸ் ரிசல்ட்
மாநில அளவில் 1, 2, 3 இடங்கள் என ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டு இனி ரேங்க் முறை கிடையாது என்று அரசு நேற்று அறிவித்தது. மாநில அளவில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு சிறந்த மாணவர் என்ற சான்று மட்டுமே வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்தது இதனால் பதற்றமும் படபடப்பும் குறைந்தது.

எஸ்எம்எஸ் ரிசல்ட்
இந்த ஆண்டு முதல் செல்போன்கள் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் பதற்றம் பரபரப்பு எதுமின்றி மாணவர்கள் தேர்வு முடிவை எதிர்கொண்டனர்.












Click it and Unblock the Notifications