ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டு காதலிக்க வற்புறுத்திய மாணவன்... மனமுடைந்த +2 மாணவி தற்கொலை!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் ஈவ்டீசிங்கால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Recommended Video

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் சக மாணவன் ஈவ்டீசிங் செய்ததால் விரக்தியடைந்த +2 மாணவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். ஒரு தலை காதல் காரணமாக சக மாணவன் மாணவியின் ஹால்டிக்கெட்டை கிழித்து போட்டதால் மனமுடைந்து மாணவி தற்கொலை முடிவை எடுத்தார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசி. அகரம் அரசுப் பள்ளியில் தமிழரசி 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இவருடைய வகுப்பை சேர்ந்த பசுபதி என்ற மாணவன் தமிழரசியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளான். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு தமிழரசிக்கு மாணவன் தொல்லை கொடுத்துள்ளான்.

மாணவிக்கு தொடர்ந்து தொல்லை
நேற்றைய தினம் தமிழரசி பொதுத்தேர்வையொட்டி பள்ளி சிறப்பு வகுப்பிற்கு சென்றுள்ளார். அப்போது பசுபதி தமிழரசியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளான்.

மனமுடைந்த மாணவி தற்கொலை
தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து பசுபதி தமிழரசியின் ஹால்டிக்கெட்டை பிடுங்கி வைத்துக் கொண்டு அதனை கிழித்து போட்டுள்ளான். இதனால் மனமுடைந்த தமிழரசி தன்னுடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீஸ் விசாரணை
மாணவி தமிழரசியின் தற்கொலை பின்னணியில் ஹால்டிக்கெட் கிழித்து போட்டது மட்டும் தான் காரணமா அல்லது மாணவன் பசுபதி வேறு ஏதேனும் மிரட்டல் விடுத்ததால் தமிழரசி தற்கொலை முடிவை எடுத்தாரா என்பது தெரியவில்லை. தமிழரசியின் தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனைக்கு எதிர்ப்பு
மாணவி தமிழரசியின் உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மாணவி தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்த பின்னரே உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications