தன்னிகரற்ற தலைவர்.. பழுத்த நிர்வாகி.. கருணாநிதிக்காக தமிழில் டிவிட்டிய பிரதமர் மோடி
கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடான கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் மோடி டிவிட்டியுள்ளார்.
சென்னை: கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடான கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார் என பிரதமர் மோடி டிவிட்டியுள்ளார்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட்டியுள்ளார்.
தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானு கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார். pic.twitter.com/jUAvfgMIIv
— Narendra Modi (@narendramodi) August 8, 2018
தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும் சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன். கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடான கோடி மக்களின் எண்ணங்களிலும் இதயத்திலும் அவர் வாழ்வார். என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.