பீகார் தேர்தல் தோல்வி எதிரொலி.... மோடியின் நடவடிக்கை மாறுமா?: ப.சிதம்பரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் இனியாவது மாறுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சிதம்பரம் தெரிவித்துள்ள கருத்து:

பாரதிய ஜனதாவின் தேர்தல் அணுகு முறைக்கும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் கிடைத்த கண்டனமே இந்த தேர்தல் முடிவு. தேர்தல் பிரசாரத்தின் போது எடுத்துக் கொள்ளப்பட்ட விவாதப் பொருளை மக்கள் நிராகரித்து விட்டனர்.

PM should change style of functioning: Chidambaram

கட்சியிலும் ஆட்சியிலும் முடிவைத் தீர்மானிப்பவர் பிரதமர் மோடி. பா.ஜ.க.வில் அவர் தான் ஒரே தலைவராக காட்சி அளிக்கிறார்.

இந்த தோல்வியால் மோடி தனது போக்கை மாற்றிக் கொள்வாரா என்று பார்க்க வேண்டும். மேலும் இத் தேர்தலில் காங்கிரசின் நிலைப்பாட்டை துணைத் தலைவர் ராகுல்காந்தி தீர்மானித்தார். இதன் மூலம் அவர் காங்கிரஸ் கட்சிக்கு தலைமை ஏற்கும் நேரம் வந்து விட்டது.

பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என உடனே கூறிவிட முடியாது. ஆனால் பாரதிய ஜனதா அல்லாத கட்சிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது இந்த தேர்தல்.

இவ்வாறு சிதம்பரம் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+