20 தமிழர் படுகொலை விவகாரம்.. பிரதமர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்! - சொல்கிறார் பொன் ராதா!
சென்னை: ஆந்திர போலீசால் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் வி.டி.எம்.எஸ். எனும் புதிய சேவையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி முடிவில், பொன்.ராதாகிருஷ்ணனிடம், திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிப்பது ஏன்?," என செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஆந்திர மாநிலம் திருப்பதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது மிகவும் வேதனையான, கண்டனத்துக்குரிய செயலாகும். இதுகுறித்து மத்திய அரசு நிச்சயம் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் அமைதியாக இருக்கவில்லை. நேரம் வரும்போது நிச்சயம் பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். தகுந்த நடவடிக்கை எடுப்பார்.
தற்போதுள்ள நிலையில் ஆந்திர அரசு தான் விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், இதுபோன்ற ஒரு வன்முறை சம்பவத்தை தடுக்கவே முடியாது. தமிழகத்தில் இருந்து செம்மரக்கட்டைகள் கடத்த தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து அனுப்பும் ஏஜெண்டுகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று நம்புகிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications