ஆட்சியைத் தக்க வைத்த அதிமுக.. ஜெ.வுக்கு மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அதிமுக கூட்டணி அதிக இடத்தில் முன்னிலை வகித்து வருவதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முதல்வர் ஜெயலலலிதாவை தொலைபேசியில் தெடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணப்பட்டு வருகின்றன. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. மற்ற 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் மொத்தம் 74.26 சதவீத வாக்குகள் பதிவாயின.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையில் அதிக இடங்களில் அதிமுக முன்னணி வகிக்கிறது. மீண்டும் ஆட்சியை அதிமுக தக்க வைக்கிறது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலமாக முதல்வர் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications