For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ.குரு மறைவு.. பாமக, வன்னியர் சங்க கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

Google Oneindia Tamil News

Recommended Video

    பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்

    சென்னை: ஜெ. குரு மறைவையொட்டி பாமக, வன்னியர் சங்க கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

    பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வன்னியர் சங்க தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்.

    காலமானார் குரு

    காலமானார் குரு

    நுரையீரல் தொற்றால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த ஜெ.குருவுக்கு நேற்றிரவு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உயிர்பிரிந்தது.

    ஒரு வாரத்திற்கு துக்கம்

    ஒரு வாரத்திற்கு துக்கம்

    காடுவெட்டி ஜெ.குரு மாநில வன்னியர் சங்க தலைவராகவும் இருந்தார். இந்நிலையில் அவரது மறைவையொட்டி துக்கம் அனுசரிக்கும் வகையில் பாமக , வன்னியர் சங்கம், பாமக தொழிற்சங்க கொடிகள் ஒரு வாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடைகள் அடைப்பு

    கடைகள் அடைப்பு

    மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜெ. குரு மறைவையொட்டி ஜெயங்கொண்டம், அரியலூர், வந்தவாசி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

    நாளை இறுதிச்சடங்கு

    நாளை இறுதிச்சடங்கு

    காடுவெட்டியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள குருவின் உடலுக்கு ஏராளமான மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குருவின் உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை காலை 10 மணிக்கு காடுவெட்டி கிராமத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    PMK flags will be flying in half for a week due to Guru demise. Shops has been closed in Jayankondam and Ariyalur.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X