Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைரமுத்து சார்.. உங்களுக்கு பேத்தி வயசு இருக்கும் பொண்ணு நந்தினி.. செல்ல சீண்டலில் நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 600 மதிப்பெண்களை பெற்ற மாணவி நந்தினியை பாராட்டி தங்கப் பேனாவை நேரில் சென்று பரிசளித்த கவிஞர் வைரமுத்து, இதுதொடர்பாக வெளியிட்ட பதிவில் இடம்பெற்ற ஒரு வார்த்தையை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

கடந்த மே 8 ஆம் தேதி காலை 9.30 மணியளவில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளை தேர்வுத்துறை வெளியிட்டது. இந்த தேர்வில் இதுவரை இல்லாத அளவுக்கு நந்தினி என்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி 600 க்கும் 600 மதிப்பெண்களை எடுத்து சாதித்தார். மாணவி நந்தினிக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில், கவிஞர் வைரமுத்துவும் அவரை பாராட்டி ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில், "ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறது

Poet Vairamuthu get trolled for wishing +2 topper Nandhini as his younger sister

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்

உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே!" என குறிப்பிட்டு இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக திண்டுக்கலுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து நந்தினிக்கு தனது தங்கப் பேனாவை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நெட்டிசன்கள் அவர் வெளியிட்ட பதிவை கையில் எடுத்து கலாய்த்து தள்ளி வருகின்றனர். அதற்கு காரணம் அதில் இடம்பெற்ற "தங்கை" என்ற வார்த்தை.

69 வயதாகும் வைரமுத்து, 12 ஆம் வகுப்பை நிறைவு செய்து இருக்கும் நந்தினியை எப்படி தங்கை என்று சொல்லலாம். நந்தினிக்கு வைரமுத்துவின் பேத்தி வயதாகிறது என்ற பதிவுகளை ட்விட்டரில் கான முடிகிறது. வைரமுத்து தங்கை என்பதற்கு பதிலாக பேத்தி என்று திருத்தம் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ மாணவிகள் முழு மதிப்பெண்களை பெற்றது இல்லை. இந்த சாதனைகளை முறியடித்த மாணவி நந்தினி என்ற மாணவி தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று 600 க்கு 600 என முழு மதிப்பெண்களையும் பெற்று வரலாற்று சாதனையை படைத்தார்.

சாதாரண தச்சுத் தொழிலாளியின் மகளான நந்தினி பெற்ற இந்த மதிப்பெண் தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு வரலாற்றிலேயே அதிகம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாணவி நந்தினி, "நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். என்னால் என்ன செய்துவிட முடியும் என்று நினைத்து நான் கவலைப்படவில்லை. என் பெற்றோர் நமக்கு கல்விதான் சொத்து என்னிடம் சொல்லி வளர்த்தனர்.

நானும் இடைவிடாமல் அதை கடைபிடித்தேன். அதன் பயனாகவே இத்தனை மதிப்பெண்களை என்னால் பெற முடிந்தது. நம்பிக்கையோடு முயன்றால் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த முடியும். என்னுடைய விருப்பம் ஆடிட்டராக வேண்டும் என்பதே. சிஏ தேர்வுக்காக பயிற்சி எடுக்க இருக்கிறேன். அதற்கு தேவையான மேற்படிப்புகளை படிக்க உள்ளேன்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+