கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 4 பேர் பலி- தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது!
சென்னை: சென்னை துரைப்பாக்கம் அருகே காரப்பக்கத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் போது விஷவாயு தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்த திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகரான துரைப்பாக்கத்தை அடுத்த காரப்பக்கத்தில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஹோட்டல் இயங்கி வருகிறது. இதில் கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்துவதற்காக குமார், சரவணன், வேல்முருகன் ஆகியோர் அழைத்துவரப்பட்டனர்.
முதலில் குமார் என்ற தொழிலாளி கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். ஆனால் அவர் நீண்டநேரமாக வெளியே வராததால் சரவணன், வேல்முருகன் ஆகியோர் அடுத்தடுத்து உள்ளே இறங்கினர். பின்னர் ராஜேஸ் என்ற ஹோட்டல் ஊழியரும் உள்ளே இறங்கினார்.
இவர்கள் 4 பேரும் நீண்டநேரமாக வெளியே வராததால் ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் சிக்கியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கழிவுநீர் தொட்டியில் உள்ளே இறங்கிய 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். 4 பேரும் விஷவாயு தாக்கியதில் அடுத்தடுத்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதில் பலியான சரவணனுக்கு கடந்த 6 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றிருந்தது. இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே 4 தொழிலாளர்கள் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் சென்னையில் போராட்டங்களையும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தலப்பாகட்டி ஹோட்டல் ஊழியர்கள் நவீன், சரவணன், தினகரன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications