திருட்டு விசிடி விற்பனை: தமிழக காங். மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் குண்டாஸில் கைது
திருட்டு விசிடி விற்பனை வழக்கில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி மயிலை அசோக்குமார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருட்டு விசிடி விற்பனை செய்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் கலைப்பிரிவு மாநில துணைத் தலைவர் மயிலை அசோக்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருட்டு விசிடியை ஒழிப்போம் என நடிகர் சங்க செயலாளர் விஷால் தொடர்ந்து கூறி வருகிறார். அண்மையில் கூட திருட்டு விசிடி வேலை செய்யும் நபர்களை கண்டுபிடித்துவிட்டேன். இது யார் என்பதை விரைவில் அறிவிக்கிறேன் என விஷால் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகியான மயிலை அசோக்குமார், திருட்டு விசிடி விற்பனை செய்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தென்சென்னை காங்கிரஸ் தலைவர்களின் மிக நெருக்கமான ஆதரவாளர் மயிலை அசோக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications