திருச்சி பஸ் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம்: ஜெ. அறிவிப்பு
திருச்சி: திருச்சியில் நடந்த பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அரசு விரைவுப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு கிளம்பியது. பேருந்து இரவு 9.25 மணிக்கு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே இருக்கும் இருங்களூர் பகுதில் செல்கையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகளில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயம் அடைந்தவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் பலியானார்.
இந்த விபத்திற்கு அரசுப் பேருந்து டிரைவரின் கவனக்குறைவு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போலீசார் பேருந்தின் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். காயம் அடைந்தவர்களின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
நிவாரணம்:
திருச்சி விபத்தில் உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications