முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: அதிகாலையில் கைது செய்யப்பட்டார் கருணாஸ்
எம்எல்ஏ கருணாஸை போலீசார் இன்று கைது செய்தனர்.
Recommended Video

சென்னை: நடிகர் கருணாஸை போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கடந்த 16-ம் தேதி முக்குலத்தோர் புலிப்படையன் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திருவாடானை எம்எல்ஏ கருணாஸ், முதலமைச்சரை மிரட்டும் தொணியில் பேசியிருந்தார். அத்துடன், காவல்துறை அதிகாரி ஒருவரிடமும் சவால் விடும் தொனியில் பேசியிருந்தார்.

கைது செய்ய கோரிக்கை
முதலமைச்சர், மற்றும் காவல்துறை அதிகாரி என இருவர் மீதும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து, கருணாஸை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.
|
8 பிரிவுகள் பதிவு
இதையடுத்து கூட்டுசதி, வன்முறையை தூண்டிவிடுதல், கொலைமிரட்டல் விடுத்தல், பொதுஅமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவதூறாக பேசியது உள்ளட்ட 8 பிரிவுகளின் கீழ் வள்ளுவர் கோட்டம் போலீசார் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

3 தனிப்படைகள் அமைப்பு
இதனால் கைது செய்யவும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் பரவியதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் தான் எங்கும் தலைமறைவாகவில்லை என்றும், வீட்டில்தான் இருப்பதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.

சட்டம் கடமையை செய்யும்
கருணாஸ் கைது செய்வது தொடர்பாக நேற்றிரவு சென்னை விமான நிலையத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றார்.

போலீசார் குவிப்பு
இந்நிலையில், இன்று காலை சென்னை சாலிகிராமத்தில் உள்ள கருணாஸ் வீட்டில், நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டியன் தலைமையில் போலீசார் அவரை கைது செய்தனர். தற்போது கருணாஸ் வீடு முன்பாக பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications